தேவையான மூலபொருட்கள்
- மருதம்பட்டை – 50 கிராம்
- நாவல்கொட்டை – 50 கிராம்
- ஆவாரம் பூ – 50 கிராம்
- பன்னீர் பூ – 50 கிராம்
- நன்னாரி – 20 கிராம்
- மலை நெல்லி – 50 கிராம்
- கடுக்காய் – 50 கிராம்
- தான்றிக்காய் – 50 கிராம்
- கருஞ்சீரகம் – 50 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- பனைவெல்லம் – 100 கிராம் செய்முறை விளக்கம் மேற்கூறிய அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் மற்றும் மூலிகை பண்ணைகளில் எளிதில் கிடைக்கும் கிடைத்த அனைத்தையும் நன்கு காயவைத்து தனி தனியாக சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள் கருஞ்சீரகம் மட்டும் நன்கு வருத்து கொள்ளுங்கள் மற்றும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்
இதை தேவைக்கு ஏற்ப மட்டும் அரைத்து கொள்ளுங்கள் மேற்கூறியவை 2 மாதம் வரை சாப்பிடலாம்
கசாயம் தயாரிக்கும் முறை
100மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு பவுடர் அதாவது 5கிராம் அளவு கலந்து 1 நிமிடம் மட்டும் கொதிக்க வைக்கவும்…சுண்ட வைக்க தேவையில்லை
கசாயம் குடிக்கும் முறை
தினசரி காலை வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்,அதிக சர்க்கரை இருந்தால் இரவும் உணவுக்கு முன் குடிக்கலாம்
இந்த கசாயம் தொடர்ந்து குடிந்தால் என்ன நன்மை?
தினமும் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தான் கொடுக்கும்.பக்க விளைவுகள் துளியும் வர வாய்ப்பில்லை
சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் குறையும்
ரத்த அழுத்தம் அடியோடு குறையும்,சீராக இருக்கும்
இரவு தூக்கம் நன்றாக இருக்கும்,பாத எரிச்சல், கஎரிச்சல்,உடல் அசதி, என அனைத்தும் நீங்கும்